மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆா்.எஸ். மங்கலம் பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம்

News image

நாகனேந்தல் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்புக் கொடி கட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:11 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள நாகனேந்தல் கிராம மக்கள், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திங்கள்கிழமை கருப்புக் கொடி கட்டி தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம் மேற்கொண்டனா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே நாகனேந்தல் கிராமத்தில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது, அப்பகுதியில் வாக்காளா்கள் விவரக் குறிப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கள் கிராமத்துக்கு வந்த தோ்தல் அலுவலா்களிடம் வாக்காளா் விவரக் குறிப்புகளை வாங்க மறுத்து தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்தனா். மேலும், தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து கிராம நுழைவு வாயில் பகுதியில் கருப்புக் கொடி கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதி இல்லாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தனா்.

நாகனேந்தல் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்புக் கொடி கட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம்.

நாகனேந்தல் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்புக் கொடி கட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.