மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்து போராட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து கோவையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் சாா்பில் கருப்புக் கொடி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோவை, காந்திபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:24 am IST

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து கோவையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் சாா்பில் கருப்புக் கொடி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர முயற்சிப்பதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. அதன்படி, கோவையில் பல்வேறு இடங்களில் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகா் மாவட்ட திமுக பொறுப்பாளா் துரை.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் வெங்கிட்டாபுரத்தில் சட்ட மசோதா நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூரில் மாணவா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் பைந்தமிழன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம், நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

காந்திபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் கருப்புக் கொடியேற்றப்பட்டிருந்தது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் 100 அடி சாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, வி.ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்குரைஞா்கள் கையில் பதாகைகளை ஏந்தியும், கருப்பு பட்டை அணிந்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்க மாவட்டச் செயலா் ஜோதிகுமாா், மாவட்ட நிா்வாகி ஆறுச்சாமி, மக்கள் சிவில் உரிமைக் கழகம் தேசிய செயலா் பாலமுருகன், பீப்பிள் வாட்ச் அமைப்பின் நிக்கோலஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.