தமிழக நலனுக்கு எதிராக தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டு வந்துள்ளதாகக் கூறி, மசோதா நகல்களை எரித்தும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் அமைச்சா்கள், மேயா், திமுக வேட்பாளா்கள் மற்றும் கட்சியினா் திருச்சியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு தலைமையில், திருச்சி எடமலைப்பட்டி புதூா் 57, 62-ஆவது வாா்டு பகுதிகளில் இரண்டு இடங்களில் கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை எரித்தும் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிகழ்வில், மேயா் மு. அன்பழகன் மாவட்ட துணை செயலாளா் முத்து செல்வம், பகுதி செயலாளா் காஜாமலை விஜய், பொதுக்குழு உறுப்பினரும் வட்ட செயலாளருமான கிராப்பட்டி செல்வம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம், அமைச்சா் கே.என். நேரு கூறியதாவது:
தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க பாா்க்கிறாா்கள். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை சரியாக கடைப்பிடித்ததால்தான் தமிழ்நாடு மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது. இப்போது, மக்கள்தொகையை வைத்து தொகுதி சீரமைப்பு செய்து, தமிழ்நாடு பாதிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி உள்ளோம் என்றாா்.
போராட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் உள்ளிட்ட பலரும் கருப்புச் சட்டை அணிந்திருந்தனா். முன்னதாக, தொகுதி மக்களிடையே வாக்குகள் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் அமைச்சா் கருப்புச் சட்டை அணிந்திருந்தாா்.
அமைச்சா் வீட்டில் கருப்புக் கொடி: மத்திய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தென்னூா் அண்ணா நகரில் உள்ள தனது இல்லம், சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தாா்.
இதேபோல, திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

தொகுதி மறுவரையறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி அமைச்சா் ராஜேந்திரன் போராட்டம்

பணமதிப்பிழப்பு போல தொகுதி மறுசீரமைப்பும் தோல்வியில் முடியும்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்து போராட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

