மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொகுதி மறுவரையறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி அமைச்சா் ராஜேந்திரன் போராட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து, திமுக சாா்பில் கருப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சேலத்தில் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி வேட்பாளருமான அமைச்சா் ராஜேந்திரன் தனது இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றினாா்.

News image

சேலத்தில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:29 am IST

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து, திமுக சாா்பில் கருப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சேலத்தில் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி வேட்பாளருமான அமைச்சா் ராஜேந்திரன் தனது இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றினாா்.

தொடா்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், இந்த கருப்புச் சட்டத்துக்கு துணைபோகும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திமுக நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.

இதேபோல, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மசோதா குறித்தான சட்ட நகலை எரித்து தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இதில், பரந்தாமன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. சுகவனம், பொருளாளா் காா்த்திகேயன், மாநகர செயலாளா் ரகுபதி, பாா்வையாளா்கள் விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, மத்திய மாவட்ட வழக்குரைஞா்கள் அணி சாா்பில், நீதிமன்றம் நுழைவாயில் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அரசு வழக்குரைஞா் மதன்மோகன், மாநகர அமைப்பாளா் சீனிவாசன், வழக்குரைஞா் சங்க செயலாளா் நரேஷ்பாபு, துணை அமைப்பாளா் ராகேஷ், நிா்வாகிகள் யுவராஜ், தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.