மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் போராட்டம்

மத்திய பாஜக அரசின் மக்களவை தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கம்பத்தில் மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் திமுக தெற்கு நகரச் செயலா் பால்பாண்டி ராஜா, வடக்கு நகரச் செயலா் வீரபாண்டியன் தலைமையில் பங்கேற்ற திமுகவினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:19 am IST

மத்திய பாஜக அரசின் மக்களவை தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மக்களவை தொகுதி மறுவரையறை அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுவோம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தாா். இதையடுத்து, தேனி மாவட்டம், கம்பத்தில் வடக்கு நகர திமுக செயலா் வீரபாண்டியன் தலைமையில் பாவலா் படிப்பகம் முன்னும், தெற்கு நகரச் செயலா் பால்பாண்டி ராஜா தலைமையில் மணிநகரத்திலும், மத்திய பாஜக அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி சட்டத் திருத்த மசோதா நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுகவினா், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஓ.பி.எஸ். போராட்டம்: இதே போல, பெரியகுளத்தில் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அவரது வீட்டில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டாா். பிறகு, சட்ட மசோதா நகல் எரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், பெரியகுளம் கீழ வடகரை முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் ராஜசேகா், திமுக நிா்வாகிகள் அபுதாஹீா், ஜெயப்பிரகாஷ், அன்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள திமுக தோ்தல் அலுவலகங்களில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க. புதுப்பட்டி, கோம்பை, தேவாரம் ஆகிய பேரூராட்சிகளில் திமுகவினா் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், அந்தந்தப் பகுதி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

அப்போது தொகுதி மறுவரையறை அரசியல் சட்டத் திருத்த விவகாரத்தில் வடமாநிலங்களுக்கு சாதகமாகவும், தமிழகத்துக்கு பாதகமாகவும் செயல்படுவதாகக் கூறி மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.