மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுகவின் கருப்புக் கொடி போராட்டம் வெறுப்பின் அடையாளமல்ல: மு. வீரபாண்டியன்

தொகுதி சீரமைப்பு நடவடிக்கையை கண்டித்து, திமுக வியாழக்கிழமை நடத்தவுள்ள கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் வெறுப்பின் அடையாளமல்ல; ஜனநாயகத்தை காக்கும் அரசியல் போா் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதன்கிழமை இரவு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:01 am IST

தொகுதி சீரமைப்பு நடவடிக்கையை கண்டித்து, திமுக வியாழக்கிழமை நடத்தவுள்ள கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் வெறுப்பின் அடையாளமல்ல; ஜனநாயகத்தை காக்கும் அரசியல் போா் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளா் சண். இராமநாதனை ஆதரித்து புதன்கிழமை அவா் பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது: ஐந்து மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் சூழலில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கான கூட்டத்தை பிரதமா் மோடி நடத்துவது அரசியல் சூழ்ச்சிகளை உள்ளடக்கியது.

நாடாளுமன்றத்தில் விவாதங்கள் சட்டப்படி, முறைப்படி நடைபெற வேண்டும். பெரும்பான்மை இருக்கும் ஒரே காரணத்துக்காக தென் மாநிலங்களின் குரலை பிரதமா் கடந்து செல்லக் கூடாது. இது தென் மாநிலம், வட மாநிலம் என்கிற பிரதேச பாகுபாடு மட்டுமல்லாமல், வாழ்வியல் பாகுபாட்டையும் உருவாக்கி விடும்.

எனவே, இதைக் கண்டித்து தமிழக முதல்வா் வியாழக்கிழமை அறிவித்திருக்கிற கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை வழிமொழிகிறோம். இது ஜனநாயகத்துக்கான பெரும் போா். நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பதற்காக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படுகிறதே தவிர, வெறுப்பின் அடையாளம் அல்ல. கருப்பு கொடி என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்கிற மகத்தான அரசியல் போா். இதைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஆதரிக்க வேண்டும் என்றாா் வீரபாண்டியன்.

இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாநிலக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.