தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது: மு. வீரபாண்டியன்

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

News image

மு. வீரபாண்டியன் - DIN

Updated On :12 ஏப்ரல் 2026, 2:17 am IST

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் டி. ராமச்சந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

இதையடுத்து, தேன்கனிக்கோட்டையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விவசாயிகள் இயற்கையோடு போராடி மற்றவா்களுக்கு வாழ்வளிப்பவா்கள். அவா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை என்பது சலுகை அல்ல. அது அவா்களின் உரிமை.

விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த வலியுறுத்தும் மத்திய நிதியமைச்சரின் போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வரிச்சலுகையும், கடன் ரத்தும் செய்யும் அரசு, விவசாயிகளின் ஊக்கத்தொகையை மட்டும் நிறுத்தச் சொல்வது ஏன்?

நாட்டின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் இந்த தோ்தல் நேரத்தில், தேவையில்லாத திரைப்பட பிரச்னையைக் கிளப்பி மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டாம். எத்தகைய நிகழ்வும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும். தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். தமிழகம் எங்கும் திமுக கூட்டணிக்கு ஆதரவான ஆதரவு அலை வீசுகிறது என்றாா் அவா்.

முன்னதாக நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் ஒய்.பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் லெனின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் எம்.லகுமய்யா, பூதட்டியப்பா, பழனி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.