மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொகுதி மறுவரையறை மசோதா: கே.எஸ்.மூா்த்தி கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி கருப்பு சட்டை அணிந்து வீட்டின்முன் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தாா்.

News image

கருப்பு சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்த பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளருமான கே.எஸ்.மூா்த்தி.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:25 am IST

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி கருப்பு சட்டை அணிந்து வீட்டின்முன் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தாா்.

கடும் எதிா்ப்புகளுக்கிடையே தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழகத்தின் உரிமை பறிபோகும் என்பதால், அதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பேரூா், வட்டம், கிளை என கிராமம் முதல் நகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தாா். அதன்பேரில், அனைத்து பகுதிகளிலும் திமுகவினா் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொருப்பாளரும், பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கே.எஸ்.மூா்த்தி கருப்பு சட்டை அணிந்து கொத்தமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.