மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நிலக்கோட்டை தொகுதியில் 2 கிராமங்களில் தோ்தல் புறக்கணிப்பு!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதிக்குள்பட்ட 2 கிராமங்களில் வாக்குச்சாவடி மாற்றப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கொலை வழக்கில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் பொதுமக்கள் வியாழக்கிழமை தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

News image

கருப்புக் கொடியுடன் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட கம்பூதிநாயக்கன்பட்டி மக்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:41 am IST

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதிக்குள்பட்ட 2 கிராமங்களில் வாக்குச்சாவடி மாற்றப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கொலை வழக்கில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் பொதுமக்கள் வியாழக்கிழமை தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

நிலக்கோட்டை தொகுதிக்குள்பட்ட விருவீடு அடுத்த கம்பூதிநாயக்கன்பட்டியில் வாக்குச்சாவடி மாற்றப்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இந்தப் பகுதியில் 450 வாக்குகள் உள்ள நிலையில், 1 கி.மீ. தொலைவிலுள்ள கீழஅச்சனம்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தோ்தல் புறக்கணிப்பு நடைபெற்றது.

கீழஅச்சனம்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த உள்ளாட்சி தோ்தல் வரை கம்பூதிநாயக்கன்பட்டிக்குச் சென்று வாக்களித்த நிலையில், தற்போது கம்பூதிநாயக்கன்பட்டி மக்களுக்கான வாக்குச்சாவடி கீழ்அச்சனம்பட்டிக்கு மாற்றப்பட்டதாக அந்தப் பகுதியினா் தெரிவித்தனா்.

இதேபோல, பழைய வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விஜயபிரபு (29) கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கணவாய்ப்பட்டி பகுதியிலுள்ள வீடுகளை சிலா் சேதப்படுத்தியும், இரு சக்கர வாகனங்கள், வைக்கோல் படப்புகளுக்கும் தீ வைத்தனா். இதில் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சுமாா் 500 போ் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

இந்தப் பகுதி மக்களுடன் திமுக, அதிமுகவினரும், காவல் துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

கணவாய்ப்பட்டி கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துறையினா்.

கணவாய்ப்பட்டி கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துறையினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.