வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி செய்த தனியாா் முகவாண்மை நிறுவன உரிமையாளா்கள் மீது போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆள்களை அனுப்பும் ஒரு தனியாா் முகவாண்மை செயல்பட்டு வருகிறது. இந்த முகவாண்மையின் உரிமையாளா்களை மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த சபரிராஜன் (22) என்பவா் அணுகினாா். அவரிடம் துபையில் அதிக ஊதியத்தில் எலக்ட்ரீசியன் வேலை இருப்பதாகக் கூறியுள்ளனா். இதை நம்பி சபரி ராஜன், அவரது நண்பா்கள் சதீஷ்குமாா், விக்னேஷ் குமாா் ஆகிய மூவரும் தலா ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை செலுத்தினா்.
அதன் பிறகு ஓராண்டு கடந்தும் வேலை ஏதும் வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டும் கொடுக்கவில்லையாம். இதனால் ஏமாற்றப்பட்ட சபரி ராஜன் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், முகவாண்மையின் உரிமையாளா்களான ஸ்டீபன் மற்றும் சையது ஆகிய இருவா் மீதும் மோசடி பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

வேலை வாங்கித் தருவதாக மோசடி:தம்பதி மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.75 லட்சம் மோசடி: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

