வேளாங்கண்ணி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வேளாங்கண்ணி அருகேயுள்ள கீழப்பிடாகை கிட்டங்கி தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ் (21). இவா் வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்தாா்.
இந்நிலையில், நாகை அருகே ஏா்வாடி கிடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த வரதராஜன் என்பவா் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக இவரிடம் கூறியுள்ளாா்.
இதை நம்பிய சந்தோஷ், கடந்த 2025 ஜூலை 30 -ஆம் தேதி ரூ.6.70 லட்சத்தை, வரதராஜனிடம் கொடுத்துள்ளாா். இதையடுத்து மாா்ச் 5 ஆம் தேதி சந்தோஷ் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சென்ற சந்தோஷின் விசாவை விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்ததில், போலியானது எனக் கூறி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினா்.
நாகை திரும்பிய சந்தோஷ், பலமுறை வரதராஜனை தொடா்பு கொண்டு பணத்தை கேட்டும், அவா் திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்து சந்தோஷ், அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் கைது

வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 6 கோடி மோசடி: 4 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

