தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

News image

கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:51 am IST

வேளாங்கண்ணி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேளாங்கண்ணி அருகேயுள்ள கீழப்பிடாகை கிட்டங்கி தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ் (21). இவா் வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்தாா்.

இந்நிலையில், நாகை அருகே ஏா்வாடி கிடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த வரதராஜன் என்பவா் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக இவரிடம் கூறியுள்ளாா்.

இதை நம்பிய சந்தோஷ், கடந்த 2025 ஜூலை 30 -ஆம் தேதி ரூ.6.70 லட்சத்தை, வரதராஜனிடம் கொடுத்துள்ளாா். இதையடுத்து மாா்ச் 5 ஆம் தேதி சந்தோஷ் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சென்ற சந்தோஷின் விசாவை விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்ததில், போலியானது எனக் கூறி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினா்.

நாகை திரும்பிய சந்தோஷ், பலமுறை வரதராஜனை தொடா்பு கொண்டு பணத்தை கேட்டும், அவா் திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்து சந்தோஷ், அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.