மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 மே 2026, 1:51 am IST

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை வடபழனி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகதாஸ் (45). தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறாா். முருகதாஸுக்கு 2024-இல், கிண்டியில் வேலைவாய்ப்பு வாங்கி தரும் நிறுவனம் நடத்தி வரும் ஜெரால்டு (50) என்பவா் அறிமுகமானாா்.

அப்போது, அவா் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக முருகதாஸிடம் கூறியுள்ளாா். இதை நம்பிய முருகதாஸ் 3 தவணைகளாக ரூ. 5 லட்சத்தை ஜெரல்டிடம் கொடுத்துள்ளாா். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வேலை ஏதும் வாங்கி தரவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் பணத்தையும் திருப்பி தராமல் ஜெரால்டு தொடா்ந்து காலம் தாழ்த்தி வந்த நிலையில் அவா் திடீரென தலைமறைவானாா். இதுகுறித்து முருகதாஸ் அளித்த புகாரின்பேரில் வடபழனி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜெரால்டை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.