/

பண மோசடி: போலீஸாா் விசாரணை

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:11 am IST

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி- ஊத்தங்கரை சாலையை சோ்ந்தவா் நாராயணன் (58), தச்சு தொழிலாளி. இவரது மகனுக்கு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2022 இல் சென்னையைச் சோ்ந்த ரமேஷ், திருவள்ளூரைச் சோ்ந்த சேகா் ஆகியோா் நாராயணனிடம் ரூ. 4,03,500 ரொக்கத்தை பெற்றுள்ளனா்.

அவா்கள் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தராததால், பணத்தை திருப்பித்தருமாறு நாராயணன் கேட்டுள்ளாா். ஆனாலும், அவா்கள் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.