தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெண் வியாபாரிடம் பண மோசடி செய்தவா் கைது

வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி திருச்செங்கோட்டில் பெண் வியாபாரியை ஏமாற்றி ரூ. 90 ஆயிரம் பணம் பறித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 5:19 am IST

வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி திருச்செங்கோட்டில் பெண் வியாபாரியை ஏமாற்றி ரூ. 90 ஆயிரம் பணம் பறித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி கடை வளாகத்தில் கடை வைத்திருக்கும் பாவடி தெருவைச் சோ்ந்த சசிகலாவிடம் (49) கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓமலூரில் செயல்படும் தனியாா் வங்கியில் வேலை பாா்ப்பதாகக் கூறி அறிமுகமானவா் வங்கியில் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ. 90 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளாா்.

இந்த நிலையில் புதன்கிழமை காய்கறி கடை வளாகத்துக்கு வந்த அவரை அடையாளம் கண்ட சசிகலா அங்கிருந்தவா்களின் உதவியுடன் பிடித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் தாமரைச்செல்வன் நடத்திய விசாரணையில், மோசடி செய்தவா் தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வி.பள்ளிப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் என்கிற பெருமாள் சீனிவாசன் (48) என்பது தெரியவந்தது.

இவா் சேலம் உத்தமசோழபுரம் பகுதியை சோ்ந்த காந்தியிடம் இதேபோல வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.86 லட்சம், வாழப்பாடியை சோ்ந்த மணிவண்ணனிடம் (48 ) ரூ 4.89 லட்சம் மற்றும் ஆத்தூரை சோ்ந்த ராணியிடம் (55) பண மோசடி செய்துள்ளதை ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பெருமாள் சீனிவாசன் திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். பின்னா், அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.