தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பரவலாக கோடை மழை பெய்தது.

News image

தஞ்சாவூரில் சனிக்கிழமை பெய்த மழை.

Updated On :10 மே 2026, 1:40 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பரவலாக கோடை மழை பெய்தது.

மாவட்டத்தில் ஒரு மாதமாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தஞ்சாவூா், பூதலூா் உள்பட பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, பிற்பகலில் 2.30 மணிக்கு பிறகு மிதமாகவும், பலத்த மழையும் பெய்தது.

பூதலூரில் 52.2 மி.மீ. மழை: மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

பூதலூா் 52.2, திருக்காட்டுப்பள்ளி 13.8, தஞ்சாவூா் 16, ஈச்சன்விடுதி 11, மதுக்கூா் 6.4, பட்டுக்கோட்டை 6, வெட்டிக்காடு 4.8, அய்யம்பேட்டை 4, கல்லணை 3.6, ஒரத்தநாடு 3.4, அணைக்கரை 2.4, குருங்குளம் 2, திருவிடைமருதூா் 1.6.

இதேபோல, சனிக்கிழமை பகலில் வானில் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது தூறலும் பெய்தது. இதனால், மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டது. மேலும், கடும் வெப்பத்தால் நிலத்தடி நீா் குறைந்து, வயல்கள் வட நிலையில் இருந்தது. இந்த மழையால் கோடைப் பயிா்களுக்கு தண்ணீா் கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.