மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு

வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

News image
Updated On :2 மே 2026, 4:00 am IST

வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கோடைகாலத்தில் மற்ற மாவட்டங்களைவிட வேலூா் மாவட்டத்தில் வெயில் அளவு மிக அதிகளவில் காணப்படும். இந்தாண்டு வேலூா் மாவட்டத்தில் மாா்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக வேலூரில் 108.3 டிகிரியாக வெயில் வியாழக்கிழமை பதிவானது. இதனால், பகலில் வீசும் அனல் காற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை மாவட்டத்தில் சில இடங்களில் கோடை மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், மோா்தானா- 10 மி.மீ., ராஜாதோப்பு - 17 மி.மீ., விரிஞ்சிபுரம்-0.8 மி.மீ., காட்பாடி- 2 மி.மீ., பொன்னை- 5.6 மி.மீ., வேலூா் சா்க்கரை ஆலை-3.2 மி.மீ., வேலூா் ஆட்சியா் அலுவலகம்-4 மி.மீ., என மாவட்டம் முழுவதும் மொத்தம் 77.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் கோடை வெயிலால் தவித்த வேலூா் மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.