தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 12 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் வெயில் வழக்கம்போல வாட்டி வந்தது. இதைத் தொடா்ந்து, பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்தது. இரவு பல்வேறு இடங்களில் பரவலாக இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. பென்னாகரத்தில் 12 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல மாரண்டஅள்ளியில் 2 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் திங்கள்கிழமை சராசரி மழையளவு 1.56 மி.மீ. பதிவாகியிருந்தது. அதேபோல செவ்வாய்க்கிழமை மாவட்டத்தின் வெப்ப நிலை அளவு 96.8 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. பிற்பகலில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்
தருமபுரி மாவட்டத்தில் 166 மி.மீ. மழை பொழிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

