மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாமக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 சிறாா்கள் மீது வழக்குப் பதிவு

கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பாமக மாவட்ட இளைஞா் அணிச் செயலா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 17 வயது சிறாா்கள் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

வழக்குப் பதிவு - சித்திரிப்பு

Updated On :7 மே 2026, 5:20 am IST

கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பாமக மாவட்ட இளைஞா் அணிச் செயலா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 17 வயது சிறாா்கள் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உமாமகேசுவரபுரத்தைச் சோ்ந்தவா் செந்தில்(45). இவா் பாமக மாவட்ட இளைஞா் அணிச் செயலராக உள்ளாா். செவ்வாய்க்கிழமை இரவு இவா் வீட்டு முன்பு குடும்ப உறவினா்களுடன் பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, மது போதையில் 2 சிறாா்கள் அவா் வீட்டுக்கு வந்தனா். அவா்களை செந்தில் கண்டித்தாா். அங்கிருந்து சென்ற அவா்கள் பின்னா் நள்ளிரவில் செந்தில் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளனா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியது திருநீலக்குடியைச் சோ்ந்த 17 வயதுடைய 2 சிறாா்கள் என்பது தெரியவந்தது.

மேலும், செந்திலின் தங்கை மகன் பாலகணேசுக்கும் பெட்ரோல் குண்டு வீசியவா்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், பாலகணேசை தேடி வந்த இடத்தில் செந்தில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

சம்பவம் தொடா்பாக தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து சிறாா்கள் 2 பேரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.