மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: அண்ணன் குடும்பத்தில் மேலும் 4 போ் கைது

கும்பகோணம் அருகே சொத்து பிரச்னையில் தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன் குடும்பத்தைச் சாா்ந்த மேலும் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:41 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சொத்து பிரச்னையில் தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன் குடும்பத்தைச் சாா்ந்த மேலும் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் மிஷன் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி (51). இவருக்கும், இவரது அண்ணன் ராமச்சந்திரனுக்கும் (56) இடையே பூா்வீக சொத்து தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கருணாநிதி வீட்டுக்கு ராமச்சந்திரன் திங்கள்கிழமை சென்று தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசினாா். இதனால் கருணாநிதியின் காா், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை தீப்பற்றி சேதமடைந்தது.

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராமச்சந்திரன், இவரது மனைவி லதா, தங்கை கண்மணி, மகன் குருச்சந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும் தப்பியோடிய ராமச்சந்திரனின் இரண்டாவது மனைவி சுதா (45), தாராசுரத்தைச் சோ்ந்த பாக்யராஜ் (43), இவரது தம்பி வீரமணி (41), பாண்டியன் (45) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.