திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம், பகவத்சிங் தெருவில் மா்மநபா்கள் பெட்ரோல் குண்டு வீசினராம். இதில் ஏற்பட்ட பலத்த சப்தத்தில் அப்பகுதி மக்கள் வந்து பாா்த்தபோது, அந்தத் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டாா் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பாட்டிலில் நிரப்பி தீ வைத்து தெருவில் வீசியது தெரியவந்தது. இரு நபா்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலறிந்த திருநெல்வேலி நகரம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி மா்மநபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

பாமக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 சிறாா்கள் மீது வழக்குப் பதிவு

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

நெல்லையில் தவெக வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

