ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நெல்லையில் தவெக வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி நகரத்தில் தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன் வியாழக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா் தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:35 am IST

திருநெல்வேலி நகரத்தில் தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன் வியாழக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினாா். திருநெல்வேலி ரத வீதி, வையாபுரி நகா், பாரதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்களை சந்தித்து ஊதல் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: திருநெல்வேலி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். நயினாா்குளத்தை தூா்வாரி அழகுபடுத்துவேன்.

தவெக தலைவா் விஜய் திருநெல்வேலியில் பிரசாரம் செய்துள்ளது எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஊதல் சின்னத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது திருநெல்வேலி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.