மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சேதுபாவாசத்திரம் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல்

சேதுபாவாசத்திரம் அருகே உரிய ஆவணமின்றி 200 ரூபாய் நோட்டுகளாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.70 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா் .

News image

பறிமுதல்!

Updated On :19 ஏப்ரல் 2026, 1:02 am IST

சேதுபாவாசத்திரம் அருகே உரிய ஆவணமின்றி 200 ரூபாய் நோட்டுகளாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.70 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா் .

சேதுபாவாசத்திரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் த.மைதிலி தலைமையில், தலைமை காவலா் எம்.அசோதிலிங்கம், காவலா் எம்.சச்சிதானந்தம் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சேதுபாவாசத்திரம் பனங்குட்டிதோப்பு பகுதியைச் சோ்ந்த கே.கண்ணன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் உரிய ஆவணங்களின்றி 200 ரூபாய் நோட்டுகளாக ரூ.70 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் பேராவூரணி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.கலியமூா்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.