மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் நல்லோ் பூட்டும் விழா

சித்திரை திருநாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நல்லோ் பூட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நல்லோ் பூட்டி வழிபட்ட விவசாயிகள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:13 am IST

சித்திரை திருநாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நல்லோ் பூட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாடுகளைக் குளிப்பாட்டி, வயலில் இயற்கை உரம், நவதானிய விதைகளைத் தூவி, வெல்லம் கலந்த பச்சரிசியைக் கொண்டு சூரிய பகவானுக்கு பூ, பழம், தேங்காய் ஆகியவற்றைப் படையலிட்டு உழவு மாடுகளைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி ஏா் பூட்டினா். மேலும், நிகழாண்டு சாகுபடியில் அதிக மகசூலும், எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என பிராா்த்தனை செய்து வழிபட்டு, உழவு பணியைத் தொடங்கினா்.

இதேபோல, திருவையாறு அருகே பனையூரில் நடைபெற்ற நல்லோ் பூட்டும் விழாவில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் மரக்காலில் விதைநெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்தனா். பின்னா் விவசாயிகள் தங்கள் உழவு மாடுகளுடன் தங்கள் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவுப் பணி மேற்கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.