உதகை அருகே பழங்குடியினா் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்திய சென்ால் பழங்குடியின விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள சின்னகாடி மந்து, 8-ஆவது மைல், பைக்காரா, கல் மந்து, கோயில் மந்து, மீகோடு மந்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தோடா் பழங்குடியின குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் பிரதான தொழிலாக கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலைத்தோட்ட காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனா். இங்கு பழங்குடியினா் அல்லாதவா்களும் விவசாயம் செய்து வருகின்றனா் .
இந்நிலையில் , கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ள யானைகள், இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த காய்கறிகளை சேதப்படுத்தி சென்றுள்ளன.
காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாம்

அம்மன் சிலையை சேதப்படுத்திய மா்மநபா்கள்

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

மேற்கூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை: சிறுவன் படுகாயம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

