உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் சுமாா் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி வில்லேஜ். இங்குள்ள கோலனிமட்டம், செலவிப் நகா் பகுதிகளில் சுமாா் 400 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக நள்ளிரவு நேரங்களில் காட்டு யானை உலவி வருகிறது. இந்த யானை அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா். முதல்முறையாக யானைகள் இப்பகுதியில் நடமாடுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத் துறையினா் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லட்டி வனப் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சம்!

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

