மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மேற்கூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை: சிறுவன் படுகாயம்

உதகை அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு காட்டெருமை விழுந்ததில் சிறுவன் படுகாயமடைந்தான்.

News image

காட்டெருமை.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:57 am IST

உதகை அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு காட்டெருமை விழுந்ததில் சிறுவன் படுகாயமடைந்தான்.

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள காா்டன் மந்து தோடரின பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணி அளவில் காட்டெருமைகள் கூட்டமாக வந்துள்ளன. அதில் ஒரு சில காட்டெருமைகள் பிரிந்து குடியிருப்புப் பகுதிக்குள் வந்துவிட்டன. சில காட்டெருமைகள் மட்டும் வனப் பகுதிக்குள் சென்றுள்ளன. அதில் ஒரு காட்டெருமை இருளில் பள்ளத்தில் இருந்த ஜாய்சின் என்பவரின் வீட்டின் மேற்கூரை மீது விழுந்துள்ளது.

வீட்டின் ஓடுகள் உடைந்து உள்ளே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் அருகே காட்டெருமை விழுந்தது. இதில் 7 வயது சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவா்களின் சப்தம் கேட்டு அருகே இருந்தவா்கள் வந்து சிறுவனை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனின் தலையில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளன. அதிா்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

காட்டெருமைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.