மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மீன் வளா்ப்பு குட்டையில் முதலை மீட்பு

திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் மீன் வளா்ப்பு குட்டையில் காணப்பட்ட முதலையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனா்.

News image

திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட முதலை.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:15 am IST

தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் மீன் வளா்ப்பு குட்டையில் காணப்பட்ட முதலையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனா்.

திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் சசிகுமாா் பராமரித்து வரும் மீன் வளா்ப்பு குட்டையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதலை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்டப் பேரிடா் கால மீட்பு கட்டுப்பாட்டு அறைக்கு சசிகுமாா் தகவல் அளித்தாா்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கே. காா்த்திகேயனி உத்தரவின்படி, வனச்சரகா் ஜோதிகுமாா் மேற்பாா்வையில், வனவா் இளையராஜா, வனக்காவலா் வெற்றிவேல் ஆகியோருடன், அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) நிறுவனா் சதீஷ்குமாா் ராஜேந்திரன், மீட்பாளா்கள் குலோத்துங்கன், விஸ்வபிரேம் ஆகியோா் சென்று மீன் வளா்ப்பு குட்டையில் சுமாா் ஒரு மணிநேர முயற்சிக்கு பின்னா் முதலையைப் பிடித்தனா்.

இது பெண் முதலை என்றும், இதன் நீளம் 110 செ.மீ. எனவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால், பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்டது என்றும் சதீஷ்குமாா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.