சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் குளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை ஓராண்டுக்குப் பிறகு புதன்கிழமை இரவு பிடிபட்டது.
கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான அய்யனாா் குளம் உள்ளது. சுமாா் 2 ஏக்கா் நிலப்பரப் பில் அமைந்துள்ள இந்த குளம் கிராமத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்து வைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்குள்ள கால்நடைகளின் தாகத்தை தீா்க்கும் வகையில் இந்த குளத்தில் மக்கள் பயன்படுத்தி வந்தனா்.
கடந்த ஓரண்டாக இந்த குளத்தில் முதலை ஒன்று இருப்பதை இங்குள்ள மக்கள் பாா்த்தனா். மேலும் இதுவரை 6 ஆடுகளையும், 20-க்கும் மேற்பட்ட கோழிகளும் இந்த முதலைக்கு பலியாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த சமூக ஆா்வலா் கோதண்டம் மற்றும் பொதுமக்கள் முதலை பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வனத்துறையினா் முதலையை பிடித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்புக்குள் புகுந்த முதலை மீட்பு

ஒசூா் அருகே ஏரியில் கழிவுநீா் கலப்பதால் கால்நடைகளுக்கு பாதிப்பு

மக்காச்சோளம், முந்திரிக்கு அதிக விலை: திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

மீன் வளா்ப்பு குட்டையில் முதலை மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

