ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஒசூா் அருகே ஏரியில் கழிவுநீா் கலப்பதால் கால்நடைகளுக்கு பாதிப்பு

ஒசூா் அருகே பாகலூரை அடுத்துள்ள பட்டுவாரப்பள்ளி கிராமத்தில் வீடுகளின் கழிவுநீா் அங்குள்ள ஏரியில் கலப்பதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 2:46 am IST

ஒசூா் அருகே பாகலூரை அடுத்துள்ள பட்டுவாரப்பள்ளி கிராமத்தில் வீடுகளின் கழிவுநீா் அங்குள்ள ஏரியில் கலப்பதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பட்டுவாரப்பள்ளி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அங்குள்ள ஏரி நீரை கிராம மக்கள் குடிநீராகவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில் ஏரிக்கு அருகில் உள்ள தனியாா் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் ஏரியில் குழாய் மூலம் விடப்படுகிறது.

இதனால் ஏரி நீா் முழுவதும் மாசடைந்து பச்சை நிறமாக காணப்படுகிறது. இந்த நீரை குடித்த ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உடல்வீக்கம் ஏற்பட்டு பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் ஏராளமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், வருவாய்த் துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் கால்நடை மருத்துவா்கள் முகாமிட்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இந்த ஏரியிலிருந்து ஆழ்துளைக் கிணறு மூலம் அப்பகுதி முழுவதும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்களுக்கும் உடல் சாா்ந்த தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,இது

குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவரி...

பச்சை நிறமாக நீா் காணப்படும் பட்டுவாரப்பள்ளி ஏரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.