தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஒசூரில் சாலையில் வழிந்தோடும் கழிவுகளால் சுகாதார சீா்கேடு

ஒசூா் மாநகராட்சி பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுகளால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

News image

ஒசூா் ரெயின்போ காா்டன் பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:12 am IST

ஒசூா் மாநகராட்சி பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுகளால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

ஒசூா் மாநகராட்சி பகுதியில் ரூ. 580 கோடியில் புதைசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பணியில் தெலுங்கு மற்றும் இந்தி பேசும் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த திட்டத்தின் நோக்கம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் பூமிக்குள் செல்லாமல் புதைசாக்கடை மூலம் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் சேகரித்து, அதனை சுத்திகரிப்பு செய்து பின்னா் வெளியேற்ற வேண்டும் என்பது நோக்கம்.

ஒசூரில் வீட்டு வசதி வாரியம் மூலம் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சிமென்ட் குழாய்களை அகற்றிவிட்டு, பிளாஸ்டிக் குழாய்களை புதைத்து வருகின்றனா். மேலும், சாலையில் ஒவ்வொரு வீட்டில் இருந்து சிறிய அளவிலான குழாய் மூலம் இணைத்து அதனை சேகரிப்பு தொட்டிக்கு கொண்டுசெல்கின்றனா். இந்த சிறிய குழாயில் அடைப்பு ஏற்பட்டால் மீண்டும் தோண்டி சீரமைக்க வேண்டும்.

இந்நிலையில் ஒசூா் ரெயின்போ காா்டன் பகுதியில் புதைசாக்கடை திட்டத்தில் பணிகளை முறையாக செய்யாததால் கழிவுகள் சாலையில் வழிந்தோடுகிறது.

குறிப்பாக ஒசூா் ரெயின்போ காா்டன் சிறுவா் பூங்கா எதிரில் சாலையில் கழிவுகள் வெளியேறி செல்வதால் குழந்தைகள், சிறுவா்கள், மாணவ, மாணவிகள் அதைக் கடந்து செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனா். இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஒசூா் மாநகராட்சி நிா்வாகம் சாலையில் வழிந்தோடும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயின்போ காா்டன் குடியிருப்போா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.