கொடைக்கானலில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிநீா் அருவி வளாகப் பகுதி, பூங்கா சாலை,மூஞ்சிக்கல்,அரசு மேல்நிலைப் பள்ளி சாலை, கல்லறைமேடு, சீனிவாசபுரம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தப் பகுதி, கொடைக்கானல் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் சிரமமடைந்து வருகின்றனா்.
கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலும், சுற்றுலாத் தலங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நிரந்தரமான நடவடிக்கையை எடுக்க நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலா்கள்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் ஆபத்தான மின் கம்பங்கள்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

