மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

News image
Updated On :3 மே 2026, 5:08 am IST

கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களான பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், கோக்கா்ஸ் வாக், தாவரவியல் பூங்கா, பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமாக காணப்பட்டனா். பிற்பகலில் ஏரியில் படகு சவாரி செய்ய அதிகமான சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தனா்.

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் திரளாகக் காணப்பட்டதால் ஏரிச்சாலை, கலையரங்கம், நகராட்சி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வார விடுமுறையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களில் பயணிகள் வந்திருந்ததால், கொடைக்கானல் ஏரிச்சாலை முதல் வெள்ளிநீா் அருவி வரை சுமாா் 12 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமமடைந்தனா். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்குத் தேவையான இடங்களை தோ்வு செய்து கொடுப்பதற்கு கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.