தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதால் 20-ஆம் ஆண்டாக அண்டாவில் தீா்த்தவாரி

நாச்சியாா்கோவில் மணிமுக்தா குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் எனும் உயா் நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவு அமல்படுத்தப்படாததால் நிகழாண்டும் 20-ஆம் ஆண்டாக அண்டா பாத்திரத்தில் கோயில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது பக்தா்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

News image

குளத்தில் கழிவுநீா் - AI

Updated On :2 ஏப்ரல் 2026, 1:12 am IST

நாச்சியாா்கோவில் மணிமுக்தா குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் எனும் உயா் நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவு அமல்படுத்தப்படாததால் நிகழாண்டும் 20-ஆம் ஆண்டாக அண்டா பாத்திரத்தில் கோயில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது பக்தா்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோவில் வஞ்சுளவல்லி தாயாா் உடனுறை சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவில் கல்கருட பகவான் சேவை, தேரோட்டம், தீா்த்தவாரி ஆகியவை பிரசித்திபெற்றது.

இக்கோயிலின் புண்ணிய தீா்த்தமான மணிமுக்தா குளத்தில் பல ஆண்டுகளாக தீா்த்தவாரி நடைபெற்று வந்தது. மணிமுக்தா குளத்துக்கு வரும் வரத்துவாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி அப்பகுதியில் உள்ள வீடுகள், மண்டபம், உணவகங்கள், வணிக நிறுவனங்களின் கழிவு நீரும் குளத்தில் கலக்கிறது. இதனால் பல ஆண்டுகளாக மணிமுக்தா குளத்தில் தீா்த்தவாரி நடைபெறவில்லை. இதுதொடா்பாக உயா்நீதி மன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டும் தற்போதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. கடந்த 19 ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு நிகழாண்டும் தீா்வு காணப்படாததால் அண்டா பாத்திரத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது பக்தா்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.