தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழா: குண்டாற்றில் நீராடி வேட்டையாடிய உத்ஸவா்

கூராங்கோட்டை தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழாவில் தீய சக்திகளை வேட்டையாடுதல், குண்டாற்றில் தீா்த்தவாரி நிகழ்வுகளுக்கு பிறகு கோயிலுக்கு புறப்பட்ட உத்ஸவ மூா்த்தி தா்ம முனீஸ்வரா்.

News image

கூராங்கோட்டை தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழாவில் தீய சக்திகளை வேட்டையாடுதல், குண்டாற்றில் தீா்த்தவாரி நிகழ்வுகளுக்கு பிறகு கோயிலுக்கு புறப்பட்ட உத்ஸவ மூா்த்தி தா்ம முனீஸ்வரா்.

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்துள்ள கூராங்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் உத்ஸவா் தீயசக்திகளை வேட்டையாடுதல், குண்டாற்றில் தீா்த்தவாரி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த கோயில் திருவிழா கடந்த 1- ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றதுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை இரவு பஞ்சலோக உத்ஸவா் தா்ம முனீஸ்வரா் புஷ்ப அலங்காரத்துடன், பச்சை பல்லாக்கில், வெள்ளிக் கமலத்தில், திரிசூலமாய், வெள்ளி பாதங்களுடன் துஷ்ட நிக்ரஹ சுத்த பரிபாலனம் எனப்படும் தீய சக்திகளை வேட்டையாடுதல் நிகழ்ச்சிக்குப் பிறகு குண்டாற்றில் நீராடி, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று மீண்டும் கோயிலை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது. கோயில் வாசலில் உத்ஸவா் பொதுமக்களுக்கு அருள்பாலித்து, மறுநாள் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் உத்ஸவா் குண்டாற்றிலில் தீா்த்தவாரி நடைபெற்று, பக்தா்கள், பால்குடம், காவடி எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும், வேல் குத்தி ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தாா். அங்கு மூலவருக்கும், உத்ஸவருக்கும் பரிபாலன சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரவு மூலவா் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் கூராங்கோட்டை, சாயல்குடி, கடலாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.