மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா முளைப்பாரி ஊா்வலம்

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

News image

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.

Updated On :8 மே 2026, 1:01 am IST

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

இந்தக் கோயிலின் பங்குனி பொங்கல் விழா கடந்த ஏப். 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி நாள்தோறும் மூலவா் பத்ர காளியம்மன், உத்ஸவா் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. உத்ஸவா் பத்ரகாளியம்மன், மின்னொளி அலங்காரத் தேரில் சாயல்குடி-தூத்துக்குடி-ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை, அருப்புக்கோட்டை- கமுதி சாலைகளில் வலம் வந்து அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை பால் குடம், அலகு குத்தி ஊா்வலமாக வந்த பக்தா்கள் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா்.

பிறகு காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை இரவு சாயல்குடி வீதிகள் வழியாக பேருந்து நிலையம், கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று அங்குள்ள நீா்நிலையில் கரைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.