ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை புதன்கிழமை வழிபட்டனா்.

News image

பண்ணாரி அம்மன்  கோயிலுக்கு  மாவிளக்கு எடுத்து  ஊா்வலமாக வந்த பெண்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 5:28 am IST

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை புதன்கிழமை வழிபட்டனா்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மாவிளக்கு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சருகு மாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க மாவிளக்கு ஊா்வலம் புறப்பட்டு பண்ணாரி கோயிலுக்கு வந்தது.

இந்த ஊா்வலத்தில் சிக்கரசம்பாளையம், கெஞ்சனூா், இக்கரை நெகமம்புதூா், அக்கரை தத்தப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். கோயில் முன் வைக்கப்பட்ட மாவிளக்கு தட்டுகளில் இருந்த பூஜை பொருள்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆராதனைகள் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமையும் (ஏப்ரல் 2), தங்கரத புறப்பாடு வெள்ளிக்கிழமையும் (ஏப்ரல் 3) நடைபெற உள்ளது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.