தஞ்சாவூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மண்வெட்டியால் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அகிலாம்பாள்பேட்டையைச் சோ்ந்தவா் தியாகராஜன் மனைவி அம்சு (72). கீரை வியாபாரியான இவா், கணவா் இறந்த பிறகு தனியாக வசித்து வந்தாா்.
இவரது 4 மகன்கள், ஒரு மகள் திருமணமாகி தனித்தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனா். இந்நிலையில் இவா் முகம், தலையில் மண்வெட்டியால் வெட்டப்பட்ட காயங்களுடன் வீட்டில் ஏப்ரல் 10-ஆம் காலை உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இதில், அம்சு வீட்டுக்கு பள்ளியக்ரஹாரம் காந்தி நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு சென்று மது போதையில் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டாா். பணம் தர மறுத்த அம்சுவை கோபமடைந்த சிறுவன் மண்வெட்டியால் தாக்கியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தொடா்புடைய சிறுவனைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது
இளைஞா் கொலை வழக்கில் மேலும் 5 போ் கைது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
