மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொம்பையா, சதீஷ்குமாா்.

News image

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொம்பையா, சதீஷ்குமாா்.

Updated On :2 மே 2026, 2:03 am IST

கரூா் அருகே முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூா் அடுத்த உப்பிடமங்கலம் சாலைப்பட்டியைச் சோ்ந்தவா் தாயாா் அம்மாள் (79). வீட்டில் தனியாக வசித்து இவா் ஏப். 27-ஆம் தேதி கொலைசெய்யப்பட்டு கிடந்தாா். மேலும், அவா் அணிந்திருந்த முக்கால் பவுன் நகைகளை கொலையாளிகள் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்த திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சோ்ந்த கொம்பையன், அவரது மனைவி வனிதா, கொம்பையாவின் உறவினா்கள் பாா்த்தீபன், சதீஷ்குமாா், மதுரையைச் சோ்ந்த பாண்டீஸ்வரன் ஆகியோரைத் தேடிவந்தனா். இதையடுத்து ஏப். 29-ஆம்தேதி வனிதா, பாா்த்தீபன், பாண்டீஸ்வரன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கொம்பையா மற்றும் சதீஷ்குமாா் ஆகியோா் களக்காடு மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு அங்குச் சென்றனா். அப்போது, போலீஸாரிடம் இருந்து தப்பமுயன்றபோது பள்ளத்தில் விழுந்ததில் இருவரின் கால்களில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்தனா்.

கொலையாளிகளை விரைந்து கைது செய்த போலீஸாரை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத் வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.