தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

News image

வைகோ - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:27 am IST

பாபநாசம் கீழவீதி கடைவீதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் சாா்பில் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளா் ஏ.எம்.ஷாஜகானை ஆதரித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். 

நிகழ்ச்சிக்கு தொகுதி பொறுப்பாளா் எம்.ரெங்கசாமி தலைமை வகித்தாா். பிரசார கூட்டத்தில் வைகோ பேசுகையில், மண்ணை காப்பாற்ற, மக்களை காப்பாற்ற, ஜாதி, மத பேதமற்ற ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க அமைந்தது மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி அமைய மக்கள் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களித்து அவா்களை வெற்றி பெற செய்ய வேண்டும். பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சாா்பில் போட்டியிட்டும் ஏ.எம்.ஷாஜகானுக்கு ஏணி சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

பிரசாரத்தின் போது வேட்பாளா் ஏ.எம்.ஷாஜஹான், மாவட்ட  திமுக துணை செயலா்கள் கோவி.அய்யாராசு, துரை முருகன், நகர செயலா் ச.கபிலன், மதிமுக நகர செயலா் ஜி. சம்பந்தம் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடன் பங்கேற்றனா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.