/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

News image

கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலையம் முன்பாக பிரசாரம் மேற்கொண்ட மதிமுக பொதுச் செயலா் வைகோ. உடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் எம். சின்னதுரை.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:22 am IST

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில், கந்தா்வகோட்டை தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் மா. சின்னதுரையை ஆதரித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு முன்பாக அவா் பிரசாரம் செய்து பேசியதாவது:

தமிழகத்தில் நடைபெற்று வரும் மு. க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், மகளிா் உரிமைத் தொகை, நான் முதல்வன் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான ஆட்சியை நடைபெற்று வருகிறது. அரசின் நலத் திட்டங்கள் தொடரவும், சிறப்பான ஆட்சி மீண்டும் அமையவும் அனைவரும் திமுக கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைக்க வேண்டும்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வேரோடு அழிப்போம் என்ற மத்திய அமைச்சா் அமித்ஷாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றாா் வைகோ.

பிரசாரக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சியின் பல்வேறு நிா்வாகிகள் தொண்டா்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.