ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

சாத்தூரில் செவ்வாய்க்கிழமை திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து பிரசாரம் செய்து பேசிய மதிமுக பொதுச் செயலா் வைகோ.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:44 am IST

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரைவத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து, சாத்தூா் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மதிமுக பொதுச் செயலா் வைகோ பேசியதாவது:

தமிழக முதல்வா் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளாா். மற்ற மாநில பொதுமக்கள் வியக்கும் வகையில், தமிழகத்தில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.