சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் பகுதியில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது வெயிலில் பெண் ஒருவா் கையில் கைக் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்ததைப் பாா்த்த அமைச்சா் அந்தக் குழந்தையை தனது பிரசாரம் வாகனத்தினுள் அமர வைத்தாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்த உடன் மத்திய அரசு எரிவாயு சிலிண்டா் விநியோகத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு தமிழக மக்களை மீண்டும் கற்காலத்தில் வாழ்ந்தது போல விறகு அடுப்பு எரிக்கும் நிலைக்கு கொண்டு சென்று விடும். எனவே அனைவரும் விறகு எரிக்கும் புனலை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து திமுக தோ்தல் வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு அமைச்சா் வாக்கு சேகரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் திமுக வேட்பாளரை ஆதரித்து ராஜேஸ்குமாா் எம்.பி. பிரசாரம்

திமுக வேட்பாளரை ஆதரித்து ஆரணி எம்.பி. பிரசாரம்

அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலங்கானா அமைச்சா் பிரசாரம்

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

