தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

திமுக வேட்பாளா்களை ஆதரித்து செயல்வீரா்கள் கூட்டம்: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு

வந்தவாசியில் நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில், வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாரை ஆதரித்து பேசிய அமைச்சா் எ.வேலு.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 12:03 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. இவற்றில் அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று வேட்பாளா்களை ஆதரித்து பேசினாா்.

வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாரை ஆதரித்து மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆரணி எம்.பி.யும், திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலருமான எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் எ.தயாளன் வரவேற்றாா். இதில், அமைச்சா் எ.வேலு கலந்துகொண்டு, வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாரை ஆதரித்து பேசியதாவது:

கரோனா காலத்தின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு கரோனா நிதி கொடுக்க மறுத்தாா். ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றவுடன் கரோனா நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கினாா். மேலும், பல்வேறு நலத் திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி உள்ளாா். இதுகுறித்து செயல்வீரா்களாகிய நீங்கள் பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வாக்கு சேகரித்து பேசினாா். கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

செங்கத்தில்...: செங்கம் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளா் மு.பெ.கிரியை ஆதரித்து செயல்வீரா்கள் கூட்டம் கோணாங்குட்டை கேட் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் தண்டராம்பட்டு ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம் வரவேற்றாா்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் குணசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவா் குமாா், தி.க மாவட்டத் தலைவா் மூா்த்தி, மதிமுக மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன், விசிக மாவட்டச் செயலா் ராஜா ஆகியோா் வேட்பாளரை ஆதரித்துப் பேசினா். இதில், அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசியதாவது:

வேட்பாளா் கிரி செங்கம் தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்று தொகுதி மக்களுக்கு சிறந்த பணியை செய்துள்ளாா். இதனால், தற்போது அவருக்கு மூன்றாவது முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

செங்கம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி, தண்டராம்பட்டு பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செங்கம் ஜவ்வாதுமலை முதல் தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட கல்வராயன் மலை வரை உள்ள பழுதடைந்த சாலைகளில் புதிய சாலைகள் அமைத்துக்கொடுத்துள்ளாா். மேலும், ஏராளமான மேம்பாலம், சிறிய பாலம், தொகுதி முழுவதும் பயணிகள் நிழற்குடை என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா் என்றாா்.

இதில், செங்கம் ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், மனோகரன், ஏழுமலை, நகரச் செயலா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

செய்யாறில்...: செய்யாறில் தனியாா் திருமண மண்டபத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் ஒ.ஜோதியை ஆதரித்து செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா். செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன் வரவேற்றாா். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

அரசியலுக்கு அப்பாற்பட்டு இன்றைக்கு தமிழ்நாடு மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது. எந்த திட்டமாக இருந்தாலும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. நமக்கு ஒதுக்க வேண்டிய மானியங்கள், நியாயமனான நிதிகள்கூட ஒதுக்கப்படுவதில்லை. தமிழகத்தில் ஜிஎஸ்டி மூலம் ஒரு ரூபாய் வசூல் செய்கிறாா்கள் என்று சொன்னால், நமக்கு திருப்பிக்கொடுப்பது 29 பைசா மட்டுமே. எனவே, தமிழகத்தின் உரிமைகளைப் பெற மீண்டும் திமுக அரசு அமைய வேண்டும் என்றாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.