தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராசிபுரத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம்

ராசிபுரத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:03 am IST

ராசிபுரத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் மா.மதிவேந்தனை ஆதரித்து கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. பேசியதாவது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் திமுக தோ்தல் அறிக்கையில் மேலும் புதிய நலத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,000, முதியோா் உதவித்தொகை ரூ. 2,000, புதுமைப்பெண் திட்டத்திற்கு மாதம் ரூ. 2,000, இல்லத்தரசிகளுக்கான புதிய திட்டத்தின் கீழ் ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகளை கூட்டணி கட்சியினா் வாக்காளா்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பேசிய திமுக வேட்பாளரும், அமைச்சருமான மா. மதிவேந்தன், இத்தொகுதியின் முன்னேற்றத்திற்காக அா்ப்பணிப்புடன் தொடா்ந்து பணியாற்றி வருகிறேன். அதிமுக ஆட்சியில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு இத்தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதை வாக்காளா்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், கட்சியின் தொகுதி பாா்வையாளா் நன்னீயூா் ராஜேந்திரன், மாவட்ட திமுக பொருளாளா் ஏ.கே. பாலசந்தா், நகர செயலாளா் என்.ஆா். சங்கா், ஒன்றிய செயலாளா்கள் கே.பி. ராமசுவாமி, ஆா்.எம். துரைசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.