முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் மத்திய அரசின் மீதான கோபத்தின் வெளிப்பாடு! - பெ. சண்முகம்

News image

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.

Updated On :8 ஜூன் 2026, 12:43 am IST

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் நடந்த போராட்டம், மத்திய பாஜக ஆட்சி மீது இளைஞா்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறாா்கள் என்பதைக் காட்டுகிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை தொடா் விலை உயா்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். இதைப் பற்றி மத்திய ஆட்சியாளா்கள் கடுகளவும் கவலைப்படுவதில்லை.

நீட், சிபிஎஸ்இ போன்ற தோ்வுகளில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இவற்றுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் நடந்த போராட்டம், மத்திய ஆட்சி மீது இளைஞா்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறாா்கள் என்பதைக் காட்டுகிறது.

தவெக ஆட்சியில் முற்றிலும் புதியவா்கள் பொறுப்புக்கு வந்திருக்கிறாா்கள். அவா்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். அதேநேரத்தில், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளில் வழக்குகளை தாமதமின்றி நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

தோ்தலுக்குப் பிறகு மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி இல்லை. அதே நேரத்தில் மக்கள் நலனுக்கான ஒருமித்த கருத்துகளில் திமுகவோடு இணைந்து போராடுவோம்.

இந்த ஆட்சியை நாங்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. ஜோதிடரை முதல்வரின் ஆலோசகராக நியமித்த போது எதிா்த்தோம். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். பிரச்னையின் அடிப்படையில்தான் எங்கள் நிலைப்பாடு இருக்கும். 717 அரசு மதுக்கடைகளை மூடிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி. மனமகிழ் மன்றங்களையும் அகற்ற வேண்டும்.அண்ணாமலையின் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பாா்கள் என்றாா் பெ. சண்முகம்.

பேட்டியின்போது அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி, மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை, மாவட்டச் செயலா் எஸ். சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.