/

ஆலவயல் பெரியபூதன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் பெரிய பூதன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் பெரியபூதன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2026, 2:57 am IST

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் பெரிய பூதன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக புதன்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரஹஹோமம் மற்றும் முதல், இரண்டாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வியாழக்கிழமை காலை 9.40 மணியளவில் குடமுழுக்கு நடைபெற்றது.

ஊா் முக்கியஸ்தா்கள் பெரி. அழகப்பன் தலைமையிலும், பழனி, காடன் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில் முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரியத் தலைவா் பி.கே.வைரமுத்து, திமுக ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ.அழகப்பன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் காசி.கண்ணப்பன், சி.சரவணன் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.