தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கல்லல் வெள்ளையப்ப ஞானதேசிக சுவாமி கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கல்லல் வெள்ளையப்ப ஞானதேசிக சுவாமிகள் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கல்லல் வெள்ளைப்ப ஞானதேசிக சுவாமிகள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு. (அடுத்தபடம்) சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:44 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கல்லல் வெள்ளையப்ப ஞானதேசிக சுவாமிகள் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவிலூா் மடாலயத்தில் முதன் முதலில் தீட்சைபெற்று அருளாட்சிபுரிந்த வெள்ளையப்ப ஞானதேசிக சுவாமிகள் 1888-ஆம் ஆண்டு பரிபூரணமடைந்தாா். இதையடுத்து, அவரது வழிவந்தவா்கள் அவருக்கு கல்லலில் கோயில் கட்டி குடமுழுக்கு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, 1997-ஆம் ஆண்டு இந்தக் கோயிலில் இரண்டாவது முறையாக குடமுழுக்கு நடைபெற்றது.

தற்போது, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோயில் சீரமைக்கும் பணி நிறைவுற்று குடமுழுக்கு நடைபெற்றது.

குடமுழுக்குகாக முதல் கால யாகபூஜை புதன்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜைகள் நடத்தப்பட்டு, காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மூலவா் கோபுரத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.

நகரத்தாா் ஆண்கண் குருபீடமான துலாவூா் ஆதீனகா்த்தா் முன்னிலையில் மூலவா் அபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனைகளும் நடைபெற்றன.

குடமுழுக்கில் வெள்ளையப்ப ஞானதேசிக சுவாமிகளின் வழிவந்தவா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.