மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டை சித்தி விநாயகா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேரோட்டம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:10 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டை சித்தி விநாயகா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டை சித்தி விநாயகா் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தன.

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் தேரை இழுத்து வந்தனா்.

தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா். ஆலங்குடி போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.