தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.

News image

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :8 மே 2026, 4:36 am IST

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, புண்ணியாகவாசனம், தன பூஜை, வாஸ்து சாந்தி, முதல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, யாக சாலையிலிருந்து மேள தாளங்களுடன் புறப்பாடாகிய புனிதநீா் கொண்ட கலசம் கோயிலைச் சுற்றி வலம் வந்தன. இதன்பிறகு, மூலவா் விமானத்துக்கும், பரிவாரத் தேவதைகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

இதையடுத்து, சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த குடமுழுக்கில் நாகமலை புதுக்கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

குடமுழுக்கான ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையா் நா. சுரேஷ், உதவி ஆணையா் பொன்.சி. லோகநாதன், பேஷ்காா் காளிமுத்து ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.