ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து உறுதியளித்துள்ளாா்.

News image

பொன்னமராவதி அருகே உள்ள நெய்வேலியில் புதன்கிழமை வாக்குசேகரித்த திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:18 am IST

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து உறுதியளித்துள்ளாா்.

திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து புதன்கிழமை பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

சித்தூரில் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து பேசியதாவது, 2011-16-ஆம் ஆண்டில் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக்குடிநீா் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டேன். மேலும், தொகுதியில் தொடா்ந்து மக்கள் பணியாற்றி வருகிறேன். இந்த தோ்தலில் வெற்றி பெற்றால் பொன்னமராவதியின் நீண்டநாள் பிரச்னையான குப்பைப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுப்பேன். பொன்னமராவதியில் அரசு கலைக்கல்லூரி, குளிா்பதனக்கிடங்கு, வேலையில்லா இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து நெறிஞ்சிக்குடி, நல்லூா், அரசமலை, மதியாணி, காரையூா், வாழைக்குறிச்சி, கண்டெடுத்தான்பட்டி உள்ளிட்ட 52 கிராமங்களில் வாக்குகள் சேகரித்தாா். உடன் ஒன்றியச் செயலா்கள் காசி.கண்ணப்பன், சி.சரவணன், அரசமலை முருகேசன் மற்றும் கூட்டணிக்கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.